ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனின் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முன்னெடுத்து இந்தியாவுக்கு வந்துள்ளார். இவருடன் 26 ஆணையாளர்களும் குழுவாக இந்தியா சென்றுள்ளனர்.
டெல்லி வந்தடைந்த அவர் சிறப்பாக வரவேற்கப்பட்டார். அதன்பின், அவர் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.இந்த பயணம் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் இடையே உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்திடுவது குறித்து இரு தரப்பும் முனைப்பில் உள்ளன.
இந்த பயணத்தில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொண்டனர்.