பல ஆண்டுகளாக ஐரோப்பாவை பிளவுபடுத்திய ஒரு பிரச்சினைக்கு ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது ஊழியர்களுக்கு பாகுபாடு காட்டாத பொதுவான தடையாக, ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தலைக்கவசங்களைத் தடை செய்யலாம் என ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் கூறியது.
ஜெர்மனியில், பணிபுரியும் பெண்களுக்கு முக்காடு தடை விவகாரம் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாக உள்ளது. அந்த வகையில் பிரான்ஸில் 2004 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் இஸ்லாமிய தலைக்கவசம் அணிவதைத் தடை செய்தது. அதைத் தொடர்ந்து பெல்ஜிய நிறுவனத்தில் வேலை பயிற்சிக்கு விண்ணப்பித்த முஸ்லீம் பெண்னுக்கு முக்காடு அணியக் ௯டாது என்று கூறப்பட்டது. அதாவது நிறுவனம் ஒரு நடுநிலை விதியைக் கொண்டுள்ளது. அதன்படி தொப்பி, பீனி அல்லது தாவணியாக இருந்தாலும் நிறுவன வளாகத்திற்குள் தலையை மூடுவது அனுமதிக்கப்படாது என்று ௯றப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்தப் பெண் பெல்ஜிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதம் மற்றும் ஆன்மீக அடையாளங்களை கண்ணுக்குத் தெரியும்படி அணிவதைத் தடைசெய்யும் நிறுவனத்தின் விதியானது அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவானதாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் (CJEU) நீதிபதிகள் அப்பெண்ணிற்கு ஆலோசனை ௯றினர். மேலும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் சில நிபந்தனைகளின் கீழ் பணியாளர்கள் தலையில் முக்காடு அணிவதைத் தடை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.