இந்தியாவை விட ரஷியாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் கச்சா எண்ணெய்யை 6 மடங்கு கூடுதலாக இறக்குமதி செய்துள்ளன என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னாலேனா பேயர்போக் இந்தியாவில் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது இரு நாட்டு வெளியுறவு மந்திரிகளின் சந்திப்பில், நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை நடத்தினர். டெல்லியில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை இன்று நடத்தினர். இதில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், கடந்த பிப்ரவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரஷியாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் 6 மடங்கு கூடுதலாக எரிபொருள் வாங்கியுள்ளது என்று கூறினார்.