சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கான முறையான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு உலக நாடுகள் கூறி வருகின்றன. அந்த வகையில், உலகின் முதல் கிரிப்டோ கரன்சி விதிமுறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த செய்தி சர்வதேச கவனத்தை ஈர்த்ததுடன், பல்வேறு உலக நாடுகள் கிரிப்டோ விதிமுறைகளை விரைவாக ஒழுங்கு படுத்துவதற்கான அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிருஸ்செல்ஸ் - ல் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அமைச்சர், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கிரிப்டோகரன்சி விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும், இந்த விதிமுறைகள் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளார். எஃப் டி எக்ஸ் கிரிப்டோ கரன்சி நிறுவனம் உடைந்தது உள்ளிட்ட சில அண்மை நிகழ்வுகள், கிரிப்டோ கரன்சி விதிமுறைகளை விரிவாக செயல்படுத்துவதன் அவசியத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், கிரிப்டோ சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.