உலக அளவில் அதிக வெப்பமடையும் கண்டமாக ஐரோப்பா மாறி வருவதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஐநா சபையின் உலக வானிலை மையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை முகமை ஆகியவை இணைந்து கூட்டாக புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் ஐரோப்பா கண்டம் அதிக வெப்பமாக மாறி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளை விட 2 மடங்கு அதிகமாக ஐரோப்பாவின் வெப்பநிலை உயர்ந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் அபாயம் நேரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி அனைத்து ஐரோப்பிய நாடுகளும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஐரோப்பாவின் 43% மின்சார தேவை புதுப்பிக்கத்தக்க வகையில் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளில் தொழில் புரட்சிக்கு முந்தைய அளவை விட கூடுதலாக, 2.3 டிகிரி செல்சியஸ் ஆக ஐரோப்பாவின் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஐரோப்பாவில் அதிக அளவில் காட்டுத் தீ, பனிப்பாறை உருகுதல், பனிப்பொழிவு இல்லாமை போன்றவை பதிவாகி வருகின்றன. மேலும், மனித உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 2 ஆண்டுகளில் 10% பனிப்பாறைகள் உருகி உள்ளதாக அதிர்ச்சி தகவலும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.