ஜெர்மனி பெர்லின் நகரில் யூத வழிபாட்டு தலம் தாக்கப்பட்டது. ஜெர்மனியில் பெர்லின் நகரில் புகழ் பெற்ற யூத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. இந்த வழிபாட்டு தலம் சார்பில் பள்ளி-கல்லூரிகள், தங்கும் விடுதிகள் போன்றவை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இந்த வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த ஆலயத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தற்போது அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.