ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 19 உக்ரைன் வீரர்கள் பலியாகினர்.
ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று உக்கரைனில் நடைபெற்றது. அப்போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 19 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதல் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்து உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் கூறுகையில், போர்க்காலத்தில் பாதுகாப்பு படையினர் பெரும் கூட்டமாக கூடும் இடத்தின் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார். இது மட்டுமல்லாமல் உக்ரைன் ஒடெசா பகுதியிலும் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகும், அதில் எட்டு பேர் காயமடைந்ததாகும் தகவல்கள் வந்துள்ளன. இதற்கு ரஷ்யா தரப்பு பதில் அளித்துள்ளது. அவர்கள் கூறுகையில் உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் தங்கள் கப்பல் சேதம் அடைந்ததாகவும், ஷாலிவ் துறைமுகத்தை குறிவைத்து உக்ரைன் ஏவுகணைகளை வீசியதாகும் கூறியுள்ளனர்.