ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
இதில் 27 உறுப்பு நாடுகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் மூலம் தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் தேர்வு செய்கின்றனர். இந்த தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மொத்தம் 720 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த உறுப்பினர்கள் குடிமக்களின் நலன்களை நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 45 கோடி பேர் வசிக்கின்றனர்.
இந்த தேர்தலில் ஐரோப்பிய ஆதரவு கட்சிகளும், மைய கட்சிகளும் பெரும்பான்மையை தக்கவைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.