எவர்கிரீன் ஷிப்பிங் நிறுவனம், கடந்த 2021 ஆம் ஆண்டு, சூயஸ் கால்வாயில் தனது மிகப்பெரிய கப்பல் மாட்டிக்கொண்டதை அடுத்து பிரபலமானது. தைவானை சேர்ந்த இந்த நிறுவனம், தற்போது மீண்டும் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. தனது 3100 பணியாளர்களுக்கு, 5 வருட சம்பளத் தொகையை போனசாக அறிவித்துள்ளதால் இம்முறை உலகளவில் பிரபலமடைந்துள்ளது.
வருடாந்திர முறையில் எவர்கிரீன் நிறுவனத்தின் சம்பள செலவினங்கள் 44745 முதல் 171154 டாலர்கள் வரை கூறப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு 39.82% லாப உயர்வை இந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன் விளைவாக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சம்பளத் தொகையை விட, இந்த வருடத்தில் 10 முதல் 11 மாத சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தவிர, போனஸ் தொகையாக 5 வருட சம்பள பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.