ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி கலில் ஹக்னி உயிரிழந்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் அகதிகள் விவகாரத்துறை மந்திரியாக பணியாற்றிய கலில் ஹக்னி, காபுலில் உள்ள அமைச்சக அலுவலகத்தில் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு நபர் உடல் முழுவதும் மறைத்து வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி கலில் ஹக்னி உயிரிழந்தார். மேலும் அலுவலக ஊழியர்களான 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு, அகதிகள் விவகாரத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, யார் இந்த தாக்குதலை நடத்தியதென்றும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. கலில் ஹக்னி, ஆப்கானிஸ்தானின் உள்துறை மந்திரி சிராஜுதினின் உறவினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.