குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தியன் ஆயிலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இந்தியன் ஆயிலின் சுத்திகரிப்பு ஆலையில், இன்று அதிக தீவிரமாக ஒரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 2 கிலோமீட்டர் பரப்பளவில் கரும்புகை சூழ்ந்துள்ளது, இதுவரை தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து காரணமாக, எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதில்லை. ஆலயத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயின் காரணம் பற்றி எதுவும் இதுவரை தெரியவில்லை.