அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே 3-வது முறையாக நள்ளிரவில் வெடி விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே கடந்த சில நாட்களாக சிறிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து வருகிறது. இந்த வாரத்தில் 3வது வெடிப்பு சம்பவமாக பொற்கோயில் அருகே ஸ்ரீ குரு ராமதாஸ் ஜி நிவாஸ் விடுதியின் வெளியே வெடிகளை பயன்படுத்தி விபத்தை நிகழ்த்தியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறுகையில்,கைது செய்யப்பட்ட 5 பேரும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பட்டாசு தயாரிக்கும் பொருள்களை கொண்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.