நடப்பு ஆண்டில் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதி ரூ.82,640 கோடியாக இருக்கும் என மத்திய மந்திரி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ஆத்மநிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரிவுகளிலும் சர்வதேச அளவில் போட்டியிடவும், முதலீடுகளை கவரவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும், உலகளாவிய வினியோக சங்கிலியில் இந்தியாவை ஒருங்கிணைக்கவும் மற்றும் இறக்குமதிகளை சார்ந்திருப்பது குறைக்கப்படுவதற்காக, மத்திய அரசு உற்பத்தி தொடர்பான பி.எல்.ஐ. திட்டங்களை தொடங்கி உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் தயாரிப்புக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது 99 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. நடப்பு 2022-23 நிதியாண்டில் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதியானது ரூ.82,640 கோடியை கடந்து இருக்கும் என மத்திய மந்திரி வைஷ்ணவ் கூறியுள்ளார்.