பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளின் காரணமாக ஒரு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெங்களூர் கண்டோன்மென்ட்டில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது. அதே தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது.
கன்னியாகுமரி -பெங்களூர், தூத்துக்குடி - மைசூர்,சென்னை சென்ட்ரல் - பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரையிலும், பெங்களூர் - கன்னியாகுமரி, மைசூர்- தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரையிலும் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது.
அதேபோன்று மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது