கூட்டு நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக படுக்கை வசதிகள் கொண்ட 4 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 25,26,27ஆம் தேதிகளில் சென்னை எழும்பூர் - குருவாயூருக்கு காலை 9:45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் (16127) இல் கூடுதலாக படுக்கை பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.
இதே போன்று தஞ்சாவூர்- சென்னை எழும்பூருக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் எண்(16866) வண்டியிலும், கன்னியாகுமரி - புனே இயக்கப்படும் வண்டி எண் (16282) ரயில்களிலும் கூடுதலாக படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்க பட உள்ளதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.