ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளுக்கு இ- பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கோடைகாலத்தில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற சுற்றுலா பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அதனை தவிர்க்கும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ பாஸ் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.