நாகர்கோவில் தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

November 27, 2023

தென்னக ரயில்வே பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றது. பயணிகளின் வசதிக்காக மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன அதில் நாகர்கோவில் தாம்பரம் சிறப்பு ரயில் நவம்பர் இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது இந்த ரயில்களின் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை […]

தென்னக ரயில்வே பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றது.

பயணிகளின் வசதிக்காக மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன அதில் நாகர்கோவில் தாம்பரம் சிறப்பு ரயில் நவம்பர் இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது இந்த ரயில்களின் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் டிசம்பர் 3, 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி 7,14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இதே ரயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. பின்னர் மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 4,11,18,22 மற்றும் ஜனவரி 1, 8,15,22,29 ஆகிய திங்கட்கிழமைகளில் நாகர்கோவில் சென்றடைகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu