நெல்லை - நாகர்கோவில் இடையே வாரம்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயிலானது ஜூன் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து வாரம் தோறும் எழும்பூருக்கு வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலும், மறு மார்க்கமாக எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் திருநெல்வேலிக்கு புறப்படும் சிறப்பு ரயிலும் ஜூன் 6 முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாகர்கோவில் - சென்னை எழும்பூரில் இயங்கும் வாராந்திர சிறப்பு ரயிலும் கேரள மார்க்கமாக இயக்கப்பட்டு தற்போது தமிழகம் வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து ஜூன் 9,23 ஆகிய தேதிகளில் இரவு புறப்படும் சிறப்பு ரயிலானது எழும்பூருக்கு மறுநாள் காலை சென்றடைகிறது. மறு மார்க்கமாக ஜூன் 10,24 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து பிற்பகல் புறப்படும் சிறப்பு ரயில் அதே வழியாக மறுநாள் காலை நாகர்கோவில் சென்றடைகிறது