சொத்து வரி செலுத்த டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு சொத்து வரியில் ஐந்து சதவிகிதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
2022-23 நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி 1.10. 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. சொத்து வரி செலுத்தாதவர்கள் வரி இல்லாமல் செலுத்துவதற்கு 15. 11. 2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது இதில் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரைக்கும் செலுத்தாதவர்கள் வட்டி இல்லாமல் டிசம்பர் 15ஆம் தேதி வரை செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.