ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் காலி பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதன் விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் இணைய வழி மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் கால அவகாசத்தை நீட்டிக்க விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். எனவே இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 7ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்து கொள்ளலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.