வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்

October 9, 2024

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 2022-ல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, திவால் அடைந்ததாக அறிவித்தது. இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை மற்றும் கடன் வழங்குநர்களுக்கிடையில் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை ஏற்பட்டது. இந்நிலையில், ஜெய்சங்கர் அக்டோபர் 4-ஆம் தேதி இலங்கை பயணம் மேற்கொண்டார். இவரின் வருகை தொடர்பாக, […]

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

2022-ல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, திவால் அடைந்ததாக அறிவித்தது. இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை மற்றும் கடன் வழங்குநர்களுக்கிடையில் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை ஏற்பட்டது. இந்நிலையில், ஜெய்சங்கர் அக்டோபர் 4-ஆம் தேதி இலங்கை பயணம் மேற்கொண்டார். இவரின் வருகை தொடர்பாக, கொழும்பில் விஜித ஹேரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இலங்கையின் சா்வதேச கடன் பத்திரங்களை வைத்திருப்போருடன் கடன் மறுசீரமைப்பை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஜெய்சங்கரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும், “இலங்கையில் இந்திய திட்டங்கள் பற்றி ஜெய்சங்கருடன் ஆலோசிக்கப்படவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu