உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா யார் பக்கம் என்ற கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி பதில் அளித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 290-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் உக்ரைன் - ரஷியா போரில் இந்தியா யார் பக்கம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், உக்ரைன் - ரஷியா போரில் இந்திய அரசு இந்திய மக்களின் நலன் சார்ந்த பக்கத்தை எடுத்துள்ளது. போர் காரணமாக உணவு, எரிபொருள், உரத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று இந்தியாவும், பிரதமர் மோடியும் உலகின் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் குரலாக உருவெடுத்துள்ளனர் என்றார்.