ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் பயணம்

April 10, 2023

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் பயணம் மேற்கொள்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உகாண்டா, மொசாம்பிக் ஆகிய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக இன்று அவர் உகாண்டா போய்ச் சேருகிறார். இந்த பயணத்தின்போது உகாண்டா வெளியுறவுத்துறை மந்திரி ஜெனரல் ஜேஜே ஒடாங்கோவுடன் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். உகாண்டாவில் ஜின்ஜா நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை ஜெய்சங்கர் திறந்து வைக்கிறார். இந்த வளாகம் […]

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உகாண்டா, மொசாம்பிக் ஆகிய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக இன்று அவர் உகாண்டா போய்ச் சேருகிறார். இந்த பயணத்தின்போது உகாண்டா வெளியுறவுத்துறை மந்திரி ஜெனரல் ஜேஜே ஒடாங்கோவுடன் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். உகாண்டாவில் ஜின்ஜா நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை ஜெய்சங்கர் திறந்து வைக்கிறார். இந்த வளாகம் தொடர்பாக இந்திய அரசுக்கும், உகாண்டா அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

உகாண்டா பயணத்தை முடித்துக் கொண்டு 13-ந் தேதி மொசாம்பிக் நாட்டுக்கு ஜெய்சங்கர் செல்கிறார். அந்நாட்டுக்கு இந்திய வெளியுறவு மந்திரி ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும். இந்த பயணத்தில் மொசாம்பிக் நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும் இந்திய வம்சாவளியினருடன் உரையாடுகிறார். 15-ந் தேதி அங்கிருந்து டெல்லிக்கு புறப்படுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu