நினைவகங்கள், சிலைகள் விவரங்களை ‘க்யூஆர்’ கோடில் ஸ்கேன் செய்து காணும் வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில், செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் நினைவகங்கள், சிலைகளை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து, விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர்கோடு) மூலம் பொதுமக்கள் பார்வையிடும் வசதியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடை தனது கைபேசியில் ஸ்கேன் செய்து அதில் வரும் விவரங்களை பார்வையிட்டார். முதலில் திருவள்ளுவர் சிலை அதன்பின், அடுத்தடுத்து மற்ற சிலைகள் மற்றும் நினைவகங்களில் இந்த க்யூஆர் கோடு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.