ஐ ஐ எஃப் எல் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பேர்பாக்ஸ் இந்தியா உள்ளது. இந்த நிறுவனம், ஐ ஐ எஃப் எல் பைனான்சுக்கு ஆதரவாக 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது.
ஐ ஐ எஃப் எல் பைனான்ஸ் நிறுவனம் தங்க நகை கடன் வழங்குவதை நேற்று மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்தது. மறுநாளான இன்று, பேர்பாக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐ ஐ எஃப் எல் நிறுவனத்தின் பண கையிருப்பு குறித்து ஆர்பிஐ கேள்வி எழுப்பிய நிலையில், பேர்பாக்ஸ் இந்தியா 200 மில்லியன் டாலர்கள் தர ஒப்புக்கொண்டதாக ஐ ஐ எஃப் எல் தெரிவித்துள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு, சட்ட திட்டத்தின் படி இந்த முதலீட்டு செய்யப்படுவதாக பேர்பாக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிரேம் வத்சா தெரிவித்துள்ளார். ஐ ஐ எஃப் எல் தோற்றுநர் நிர்மல் ஜெயின் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.