போலி குறுந்தகவல்களை கட்டுப்படுத்த டிராய் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்
இந்தியாவில் டிசம்பர் 1-ஆம் தேதி பல துறைகளில் புதிய ஒழுங்குமுறை மாற்றங்கள் அமலுக்கு வரும். இதில் முக்கியமாக, டிராய் (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது. இது மோசடி செய்பவர்களால் பொதுமக்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் போலி குறுந்தகவல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாட்டின் படி, டெலிகாம் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) தொடர்பான குறுந்தகவல்களை டிராக் செய்ய வேண்டும். இது மோசடி குறுந்தகவல்களை கண்காணிக்க உதவும். டெலிகாம் நிறுவனங்களுக்கு நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். இதனை தவிர்க்கும் நிறுவனங்கள், பயனர்களுக்கு OTP பெறுவதில் தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.