கேரள மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது கள்ளக் கடல் எச்சரிக்கை என அழைக்கப்படுகிறது. அதன்படி இந்திய முன்னெச்சரிக்கை மையங்கள் இந்த சொற்றொடரை முதன் முறையாக பயன்படுத்தி தற்போது சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில் கேரளா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை 11:30 மணி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் கடற்கரை செல்வதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.