கனடா - தற்காலிக பணியில் உள்ள வெளிநாட்டினரின் குடும்பத்தினருக்கு ஒர்க் பெர்மிட் வழங்கப்படும்

December 3, 2022

கனடாவில், தற்காலிக பணியில் உள்ள வெளிநாட்டினரின் குடும்பத்தினருக்கு ஒர்க் பெர்மிட் வழங்க கனடா அரசு முடிவு எடுத்துள்ளது. ஜனவரி 2023 முதல், 2 ஆண்டுகளுக்கு, பணிக்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக 2 ஆண்டு காலத்திற்கு கனடாவில் பணி செய்பவர்களின் கணவன்/மனைவி, பணி செய்யும் வயதில் உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற வேலைகள் வழங்கப்படும் என்று கனடாவின் குடியேற்றம் அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் ரேண்டி பாய்சொனால்ட் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் […]

கனடாவில், தற்காலிக பணியில் உள்ள வெளிநாட்டினரின் குடும்பத்தினருக்கு ஒர்க் பெர்மிட் வழங்க கனடா அரசு முடிவு எடுத்துள்ளது. ஜனவரி 2023 முதல், 2 ஆண்டுகளுக்கு, பணிக்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக 2 ஆண்டு காலத்திற்கு கனடாவில் பணி செய்பவர்களின் கணவன்/மனைவி, பணி செய்யும் வயதில் உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற வேலைகள் வழங்கப்படும் என்று கனடாவின் குடியேற்றம் அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் ரேண்டி பாய்சொனால்ட் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கனடாவில் பணி செய்யும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. அத்துடன், மூன்று கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டினரின் குடும்பத்தினருக்கும், இரண்டாம் கட்டத்தில் குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டினரின் குடும்பத்தினருக்கும், மூன்றாம் கட்டத்தில் வேளாண் துறை சார்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பணிகள் வழங்கப்பட உள்ளன.

3
1
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu