நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு

September 15, 2023

கடந்த எட்டு நாட்களில் தமிழகத்தில் முட்டையின் நிலை 40 பைசா உயர்ந்துள்ளது தற்போது ஒரு முட்டை ரூபாய் 4.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை ஆகிய நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டை கோழிகள் கோழி பண்ணைகள் மூலம் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க […]

கடந்த எட்டு நாட்களில் தமிழகத்தில் முட்டையின் நிலை 40 பைசா உயர்ந்துள்ளது தற்போது ஒரு முட்டை ரூபாய் 4.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை ஆகிய நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டை கோழிகள் கோழி பண்ணைகள் மூலம் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்தது. இதனை பண்ணையாளர்கள் கடைபிடித்து வரும் நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி ஒரு முட்டை விலை ரூபாய் 4.30 லிருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு 4.35 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தொடர்ந்து முட்டையின் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் நேற்று ரூபாய் 4.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் மீண்டும் முட்டை விலை ஐந்து பைசா உயர்த்தி 4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் முட்டையின் விலை 40 பைசா உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu