விவசாயிகள் மத்திய அரசு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி

February 16, 2024

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர். ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை முன்னிறுத்தி டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக கடந்த 13ஆம் தேதி முதல் டெல்லியில் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் டெல்லியில் விவசாயிகள் நுழைய முடியாதபடி பல தடுப்புகளை அமைத்து போலீசார் […]

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர்.
ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை முன்னிறுத்தி டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக கடந்த 13ஆம் தேதி முதல் டெல்லியில் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் டெல்லியில் விவசாயிகள் நுழைய முடியாதபடி பல தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து வருகின்றனர். இவர்களை அப்புறப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை காவல்துறையினர் விரட்டியடித்தனர். இந்த நிலையில் மத்திய அரசு விவசாயிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேபோல் நேற்று அரியானாவில் நடைபெற்ற பெக்ச்சுவர்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அடுத்த பதினெட்டாம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu