டெல்லியில் விவசாயிகள் கடந்த 13ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் விளை பொருள்களில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்கின்ற 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செய்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்காக பஞ்சாபில் இருந்த புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் இடையே உள்ள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். இதற்கிடையே விவசாய சங்கத்தினர் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. நான்கு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி இன்று தொடங்கிய போராட்டத்தில் ஹரியானா பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் போலீசாரின் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் புறப்பட்டதால் அசம்பாவித சம்பவத்தை தடுப்பதற்காக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.