சென்னையில் மெட்ராஸ் - ஐ வேகமாக பரவி வருகிறது. இதனால் 12 லட்சம் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் - ஐ மூலம் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் பருவகால மாற்றத்தினால் மெட்ராஸ் ஐ நோய் பரவுவது வழக்கமானது. இது சென்னையில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 12 லட்சம் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.