கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உணவை விரைவாக டெலிவரி செய்யும் புதிய அம்சத்தை சோமேட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்லைன் உணவு நிறுவனமான சோமட்டோ கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மும்பை,பெங்களூர் போன்ற நகரங்களில் இந்த சோதனை முயற்சி நடைபெற உள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான கட்டணத்துடன் பிளாட்பாரம் கட்டணத்தை 25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கூடுதலாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்படும். இந்த முறை டெல்லி,பெங்களூர், மும்பை, ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் தற்போது அமலாகியுள்ளது.இதற்கு முன்னதாக 2023 ஆகஸ்ட் மாதத்தில் பிளாட்பார்ம் கட்டணம் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.