பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1.5 லட்சத்தை தொட்டது - வருடாந்திர அடிப்படையில் 12% உயர்வு

March 1, 2023

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் 149577 கோடியாக பதிவாகியுள்ளது. இது கிட்டத்தட்ட 1.5 லட்சத்தை எட்டியதற்கு சமமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், வருடாந்திர அடிப்படையில், 12% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து 12 மாதங்களாக, 1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில், மத்திய ஜிஎஸ்டி 27662 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி 34915 கோடியாகவும், ஐஜிஎஸ்டி 75069 கோடியாகவும் […]

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் 149577 கோடியாக பதிவாகியுள்ளது. இது கிட்டத்தட்ட 1.5 லட்சத்தை எட்டியதற்கு சமமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், வருடாந்திர அடிப்படையில், 12% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து 12 மாதங்களாக, 1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில், மத்திய ஜிஎஸ்டி 27662 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி 34915 கோடியாகவும், ஐஜிஎஸ்டி 75069 கோடியாகவும் வசூல் ஆகியுள்ளது. மேலும், செஸ் வரி 11931 கோடியாகப் பதிவாகியுள்ளது. மேலும், பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 6% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் கிடைத்த வருவாய் 15% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜிஎஸ்டி முறை செயலாக்கியதில் தொடங்கி, இதுவரை வசூல் ஆகியுள்ள செஸ் வரியில், இந்த மாதம் வரலாற்று உச்சம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu