புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கைக்கு இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டமைப்பின் (பியோ) தலைவர் ஏ.சக்திவேல் கூறுகையில், அனைத்து துறைகளிலும் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையில் இருந்து நிவாரணம், பரிவர்த்தனை செலவு குறைப்பு, மின் வணிகம், வளரும் மாவட்டங்களிடையே கவனம் செலுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருப்பதை வரவேற்கிறோம். புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையால் அடுத்த மூன்று ஆண்டுகளில் திருப்பூரில் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு நிறைவேற்றப்படும் என்றார்.