தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 12 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தின் 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டண மாற்றம் செய்யப்படும்.
வாகன வகைக்கு ஏற்ப, சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை அதிகரிக்கவுள்ளது. சென்னை வானகரம், சூரப்பட்டு, நல்லூர், ஆத்தூர், பரனூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகிறது.