இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகள் மட்டுமே இயக்கும் பெட்ரோல் பங்க் - புழலில் திறப்பு

August 10, 2023

இந்தியாவிலேயே முதல் முறையாக, பெண் கைதிகள் மட்டுமே இயக்கும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள புழல் பெண்கள் தனிச்சிறை அருகே, இந்த பெட்ரோல் பங்க் இன்று முதல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறைத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2018 முதல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் இணைந்து, ‘கைதிகள் பெட்ரோல் பங்க்’ இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒவ்வொரு பங்கிலும் 25 […]

இந்தியாவிலேயே முதல் முறையாக, பெண் கைதிகள் மட்டுமே இயக்கும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள புழல் பெண்கள் தனிச்சிறை அருகே, இந்த பெட்ரோல் பங்க் இன்று முதல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறைத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2018 முதல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் இணைந்து, ‘கைதிகள் பெட்ரோல் பங்க்’ இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒவ்வொரு பங்கிலும் 25 கைதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதுவரையில், தமிழ்நாட்டில் 5 இடங்களில் கைதிகள் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. மேலும், கூடுதலாக 6 கைதிகள் பெட்ரோல் பங்குகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை, ஆண் கைதிகள் மட்டுமே இயக்குபவையாக உள்ளன. இந்நிலையில், முதல் முறையாக பெண் கைதிகள் மட்டுமே இயக்கும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெட்ரோல் பங்க் இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்கில், 30 பெண் கைதிகள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 6000 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu