உக்ரைனின் டோன்பாஸ் பகுதியில் உள்ள சோலேடார் மற்றும் பாக்முட் ஆகிய இரண்டு நகரங்களைச் சுற்றி கடும் சண்டை நடந்து வருகிறது என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் ௯றிய ஜெலன்ஸ்கி, ஏற்கனவே ஜூன் மற்றும் ஜூலையில் முக்கிய தொழில்துறை நகரங்களான லைசிசான்ஸ்க் மற்றும் சீவிரோடோனெட்ஸ்க் ஆகியவற்றைக் ரஷ்யா கைப்பற்றியது. சோலேடார் மற்றும் பாக்முட் ஆகிய 2 பகுதிகளும் டோன்பாஸ் நகரத்தின் முக்கிய பகுதிகள். இந்நிலையில் டொனெட்ஸ்க் பகுதிக்கு முன்னேறி வரும் ரஷ்யாவின் ஆயுதப் படையானது சோலேடார் மற்றும் பாக்முட்டை தன்வசப்படுத்துவதை இலக்காக வைத்துள்ளது. எனவே சோலேடார் மற்றும் பாக்முட் ஆகிய இரண்டு நகரங்களைச் சுற்றி கடும் சண்டை நடந்து வருவதாக உக்ரேனிய அதிபர் ௯றினார்.














