சந்திரயான் 3 திட்டத்தின் இறுதி நிலை கட்டமைப்பு தொடக்கம் - இஸ்ரோ

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஜூலை மாத இறுதிக்குள் சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சுமை பாகங்களை கட்டமைக்கும் பணி தொடங்கப்பட்டு இருந்தது. தற்போது, அதன் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் உள்ள UR Rao செயற்கைக்கோள் மையத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால், சந்திரயான் 3 திட்டம், குறித்த நேரத்தில் செயல்படுத்தப்படும் என்று […]

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஜூலை மாத இறுதிக்குள் சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சுமை பாகங்களை கட்டமைக்கும் பணி தொடங்கப்பட்டு இருந்தது. தற்போது, அதன் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் உள்ள UR Rao செயற்கைக்கோள் மையத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால், சந்திரயான் 3 திட்டம், குறித்த நேரத்தில் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் முதல் வாரத்தில், சந்திராயன் 3 திட்டத்திற்கான முக்கிய சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. அதன் பின்னர், 3 பாகங்கள் கொண்ட சந்திரயான் 3 விண்கலம் கட்டமைக்கப்பட்டது. தற்போது, சுமை பாகங்களின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu