போப்பின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 48 மீன்கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
உலக கத்தோலிக்க சமூகத்தின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (88 வயது) கடந்த 21-ம் தேதி வாடிகனில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் 23-ம் தேதி முதல் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்க வைக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் திரண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். இன்று, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர், போப்பின் விருப்பத்தின்படி புனித மேரி மேஜர் பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், போப்பின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 மீன்கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மற்றும் சின்னமுட்டம் துறைமுகங்களில் 8,000 பைபர் படகுகள் மற்றும் 1,800 விசைப்படகுகள் மீண்டும் பயணிக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.