புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜனவரி 6-ந்தேதிகுள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தி 23 லட்சம் விண்ணப்பங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், 14 லட்சம் 615 விண்ணப்பங்கள், பெயர் சேர்க்க, நீக்குதல் மற்றும் திருத்தத்திற்கு பெற்று பரிசீலிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் நேரடியாக மற்றும் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மற்றும் நீக்குதல் தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலித்து, ஜனவரி 6-ந்தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பணி முடிந்து, புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் 25-ந்தேதி வழங்கப்படும்.