பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சி தொடர்கின்ற நிலையில், ADB நிதி வழங்கியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிதி இராணுவம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்லும் அபாயம் இருப்பதாக இந்தியா தெரிவிக்கிறது.
ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து (ADB) பாகிஸ்தானுக்கு சமீபத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட 800 மில்லியன் டாலர் நிதியுதவிக்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வரி வருவாய் 2018இல் 13% இருந்த நிலையில், 2023இல் அது 9.2% ஆக குறைந்துள்ளது. பாதுகாப்புச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியா கூறுகையில், இந்த நிதி வளர்ச்சி திட்டங்களுக்கு பதிலாக இராணுவம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னரும், IMF வழங்கிய நிதியுதவிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.