ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக கூ என்ற இந்திய செயலி இயங்கி வருகிறது. இந்த செயலியில், பல்வேறு இந்திய பிரபலங்கள் கணக்குகள் வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 260 பேர் நீக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சவாலை எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கூ நிறுவனமும் நிதி சவாலை எதிர்கொண்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 60 மில்லியன் பேர் செயலியை தரவிறக்கம் செய்துள்ள நிலையில், நிறுவனத்தை லாபகரமான பாதையில் இட்டுச் செல்வது அவசியமாகும். அதன் காரணமாகவே பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.