கோவா கடற்கரையில் குப்பை போட்டால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம்

November 3, 2022

'கோவா கடற்கரைகளில், வாகனம் ஓட்டுவது, குப்பை போடுவது, சமையல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என மாநில அரசு எச்சரித்துள்ளது. கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு சமீபத்தில் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கோவா கடற்கரைகளை சுத்தமாக பராமரிக்கவும், பயணியர் பாதுகாப்பாக உணரவும் பல்வேறு சட்ட விதிகளை நடைமுறைபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கோவா கடற்ரைகளில் திறந்தவெளியில் சமைக்கவும், வாகனங்கள் […]

'கோவா கடற்கரைகளில், வாகனம் ஓட்டுவது, குப்பை போடுவது, சமையல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என மாநில அரசு எச்சரித்துள்ளது.

கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு சமீபத்தில் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கோவா கடற்கரைகளை சுத்தமாக பராமரிக்கவும், பயணியர் பாதுகாப்பாக உணரவும் பல்வேறு சட்ட விதிகளை நடைமுறைபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கோவா கடற்ரைகளில் திறந்தவெளியில் சமைக்கவும், வாகனங்கள் ஓட்டவும் தடை விதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் குப்பை போட்டாலோ, கண்ணாடி பாட்டில்களை உடைத்தாலோ கடும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணியருக்கு பல்வேறு சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்களுக்கும் சில புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே நீர்நிலை விளையாட்டுக்களை நடத்த அனுமதிக்கப்படும். இதற்கான 'டிக்கெட்டு'களை அங்கீகரிக்கப்பட்ட 'டிக்கெட் கவுன்டர்'களில் மட்டுமே வினியோகிக்க வேண்டும்.

தெருவோர மற்றும் வண்டிக் கடை வியாபாரிகள், சுற்றுலா பயணியரின் நடமாட்டத்துக்கு தடையாக இருக்க கூடாது. சுற்றுலா பயணியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு 5,000 ரூபாய் முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu