குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 40 இந்தியர்கள் பலி

June 12, 2024

குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்த 40 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தெற்கு குவைத் பகுதியில் உள்ள மங்காப் என்ற நகரில், ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 40 பேர் இந்தியர்கள் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அந்த கட்டிடத்தில் இருந்து […]

குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிருந்த 40 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தெற்கு குவைத் பகுதியில் உள்ள மங்காப் என்ற நகரில், ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 40 பேர் இந்தியர்கள் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அந்த கட்டிடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. குவைத் நாட்டில் உள்ள வெளியுறவு அமைச்சகம் விபத்து பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu