குக்கர் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு உதிரி பாகங்கள் எரிந்து சேதமானது.
சேலத்தில் மூலப்பிள்ளையார் கோவில் வண்டிக்கார தெருவில் உள்ள குக்கர் தயாரிக்கும் நிறுவனத்தில், இன்று அதிகாலை 5 மணிக்கு கரும்புகை வெளியேறியது.இதனைப் பார்த்த பகுதியினர், மேலாளர் மாதேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர், ஆனால் மளமளவென தீ பரவியது. மேலும் தீ அணைக்க 30 நிமிடங்கள் போராடிய பிறகு, அங்கு உள்ள குக்கர் தயாரிக்கும் பல லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்கள் எரிந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.