இன்று காலை, ஈரானில் உள்ள போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில், இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை முழுமையாக அனைத்து விட்டனர். காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.