நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் திடீரென தீ பற்றியது. சம்பவம் அறிந்து விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மேலும் அங்கு தீ விபத்தால்
உயிர்சேதம் எதும் ஏற்படவில்லை எனவும் தீ விபத்து குறித்தான விசாரணை நடத்தி வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக கன்வேயர் பெல்ட் இயந்திரம் எரிந்து சேதம் அடைந்துள்ளது.