மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், சரஃப் பவன் என்ற 5 மாடி கட்டிடம் உள்ளது. இது ஆளுநர் மாளிகைக்கு மிக அருகில் உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேர்ந்துள்ளது. தீ கட்டிடம் முழுவதும் பரவியதாக தகவல் வெளிவந்துள்ளது.
புதன்கிழமை காலை 10 மணிக்கு, தீ விபத்து நேர்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், 15 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். ஹைட்ராலிக் ஏணிகளை பயன்படுத்தி தீயை அணைக்க போராடினர். தற்போது, தீ க்கட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், குடியிருப்புகள் ஆகியவை அமைந்துள்ளதால், பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.