ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள தன்பாத்தின் ஜோராபடாக் பகுதியில் உள்ள ஆஷிர்வாத் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜன.,31) மாலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் தீ விபத்தில் பலர் சிக்கினர். மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.